Saturday, June 12, 2010
மொழி வேறுபாடு
இயற்கை மொழிக்கும் ஒலி, ஒளி, காற்று என்பதுதான் ஆணிவேர், பக்கபலம் வேர், சல்லி வேர். இம்மூவேரைத் தவிர, வேறு வேர்கள் ஏதும் இயற்கை மொழிக்குக் கிடையாது. அதனால் Where என்று தேடினாலோ, Here என்று தேடினாலோ There என்று தேடினாலோ Hireக்குக் கூடக் கிடைக்காது. உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஒலி மொழிகள் தான் உண்டு. மனித இனத்திற்கு மட்டுமே ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மொழிகள் இருப்பதால் மனிதனின் மொழியை மனிதனே புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. அதே சமயத்தில் காட்டில் வாழும் மனிதர்கள் பல உயிரினங்களின் மொழியைக் கற்று வைத்திருப்பதால் ஒலியை எழுப்பி மிருகங்களுக்குப் புரியும்படி பேசுவது இன்றும் நடைமுறையில் உள்ளது. அதனால் ஒலியை உணர்நதால் உலகில் அனைத்து உயிரினங்களின் மொழியையும் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும் என்று தமிழ்மொழி கூறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment