உலக மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வீணான சந்தேகங்கள் எழாமலிருக்கும். வீணான சந்தேகம் எழுந்தால், வீணான எதிர்மறைச் செயல்கள் தொடர்கதையாகி விடும். பிறகு அமைதியானாலும் அது தற்காலிகமாக மட்டுமே இருக்கும். இதனால் அரிதான மானிடப் பிறவி, உலகை அறியாமலே இருந்து இறப்புப் போலவே நித்தியகண்டம் பூர்ண ஆயுசு என்றாகி விடும்.
அதனால் மொழி எதுவானாலும் அதைத் தரம் தாழ்த்திப் பேசக்கூடாது. அதே சமயம் அவரவர் மொழியின் திறம் பற்றிப் பேசலாம். இதை மாற்று மொழியினர் ஏற்பதும், ஏற்காததும் அவரவர்க்கு உரிமையுண்டு. நல்லதாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். புரியாவிட்டால் விட்டு விடலாம். சரியில்லையென்றால் மறுத்து விடலாம். எதுவாயிருப்பினும் இயற்கையுடன் ஒத்துப்போகும் மொழிதான் வளரும், வாழும். வேரில்லாத மொழிகள் விளைச்சலைத் தராமல், வேறு வேலைக்குப் பயன்படும் மரம்போலத்தான் என்று உதாரணம் கூறலாம்.
வேருள்ள மரம் விளைச்சலைத் தரும் மரம். வேரில்லாத மரம் கட்டடம் போலப் பயன்படும். ஆனால் தானாக உயராது.
Futureக்கு Nature மரம் வேண்டும்.
Furnitureக்கு Untrue மரம்தான் வேண்டும்.
Untrue மரம் Pictureக்கு Frame போடத்தான் பயன்படும்.
Saturday, June 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Arumai
ReplyDelete